வீடொன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு அனுராதபுரம் எலயாபத்து பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள வீடொன்றிலிருந்து குறித்த வீட்டுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் கண்டறிய முடியவில்லை என்றும் அலையாபத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.